பாக்கியலட்சுமி சீரியல்: ஈஸ்வரியை கதறவிட்ட ராதிகாவின் தாயாருக்கு பதிலடி கொடுக்கும் கோபி.. பாக்யாவின் அடுத்த ஆக்சன் என்ன?பாக்கியலட்சுமி சீரியல்: ஈஸ்வரியை கதறவிட்ட ராதிகாவின் தாயாருக்கு பதிலடி கொடுக்கும் கோபி.. பாக்யாவின் அடுத்த ஆக்சன் என்ன?

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி.

இப்பொழுது இந்த சீரியலில் ராதிகாவை கீழே தள்ளிவிட்டதாக கூறி கோபி தாயார் ஈஸ்வரியை காவல்துறை கைது செய்யப்பட்ட நிலையில் கோர்ட்டில் அவருக்கு தண்டனை கிடைத்துவிட்டது.

நீதிபதி ஈஸ்வரிக்கு தண்டனை கொடுக்க முடிவெடுத்த போது அவர் அப்படியே நொறுக்கி போய்விட்டார். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் ஈஸ்வரி மீது எந்த தப்பும் இல்லை என்று தாத்தா கதறி ஆர்ப்பாட்டம் பண்ணி விட்டார்.

அதுமட்டுமின்றி ஈஸ்வரிக்கு தண்டனை கிடைத்துவிட்டது என்பதால் ராதிகாவுக்கும், அவருடைய அம்மாவுக்கும் மனசுக்குள் குளுகுளுவென இருக்க தற்போது நியூ ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் நீதிபதி தண்டனை குறித்து பேசும் போது, பாக்கியா, பழனிச்சாமி மற்றும் மயூ அனைவரும் கோர்ட்டுக்கு வருகிறார்கள்.

அப்போது மாமனாருக்கு ஆறுதல் சொன்ன பாக்கியா, அத்தை நான் காப்பாற்றுகிறேன் என்று கூறுகிறார்.

இதையடுத்து மறு விசாரணை தொடங்க பாக்கிய லாயர், ராதிகா கீழே விழும் பொழுது என்ன நடந்தது என்று கண்ணால் பார்த்த சாட்சி இருக்கிறது என்று கூற. அந்த சாட்சியை விசாரிக்க அனுமதி கோரி  மயூ பெயரை சொல்கிறார். உடனே பாக்கியா, மயூவை கோர்ட்டுக்குள் கூட்டிட்டு வருகிறார்.

Also Read: சிவகார்த்திகேயனின் 3வது மகனின் பெயர் என்ன தெரியுமா? அட.. பேரு நல்லா இருக்கே!

அப்போது என் பொண்ணை எதுக்கு கூட்டிட்டு வருகிறீர்கள் என்று ராதிகா கேட்க, மயூவே கூண்டில் நின்னு சாட்சி சொல்ல சொல்கிறார் நீதிபதி.

ஈஸ்வரியை தெரியுமா என்று லாயர் கேட்க, தெரியும்  என்று மயூ கூறுகிறார். அன்னைக்கு உங்க அம்மா கீழே விழுந்த போது என்ன நடந்தது என்று கேட்கிறார். அதற்கு மயூ, நான் அங்கு தான் இருந்தேன்.

ஈஸ்வரி பாட்டியிடம் என்னுடைய அம்மா பேசிவிட்டு தண்ணீர் பாட்டிலை எடுத்துட்டு திரும்பும் பொழுது பூச்செடி ஒன்று கீழே விழுந்தது. அதில் தெரியாமல் காலை வைத்து வழுகி விழுந்து விட்டார் என்று கூறும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *