சமயபுரம் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மீது மோதிய வேன் - பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு !சமயபுரம் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மீது மோதிய வேன் - பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு !

தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மீது மோதிய வேன் மோதி 5 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் கோவிலுக்கு நடந்து சென்ற பக்தர்கள் தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாத யாத்திரையாகச் சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்று கோவிலுக்கு சென்று கொண்டிருந்த 5 பேர் மீது மோதி கோர விபத்தை ஏற்படுத்தியது.

மேலும் இந்த விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் – ஜூலை 21 ல் அனைத்துக் கட்சிக் கூட்டம் !

இதனை தொடர்ந்து புதுக்கோட்டை, கன்னுகுடிபட்டியை சேர்ந்தவர்கள் சமயபுரம் கோவிலுக்கு நடந்து சென்றபோது தஞ்சை மாவட்டம் வளம்பக்குடி பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்தில் மீனா , ராணி, மோகனாம்பாள், லட்சுமி, முத்துசாமி ஆகியோர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியாகினர். திருச்சி சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது வேன் மோதிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *