பெங்களூருவை 5 மண்டலங்களாக பிரிப்பு - மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது!!பெங்களூருவை 5 மண்டலங்களாக பிரிப்பு - மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது!!

பெங்களூருவை 5 மண்டலங்களாக பிரிப்பு: பெங்களூரில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் கூட தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்ட காட்சிகள் கண்கலங்க வைத்தது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் BBMP மறுசீரமைப்புக் குழு என்று முன்னர் அறியப்பட்ட பிராண்ட் பெங்களூரு கமிட்டியால் கர்நாடக அரசிடம் Greater Bengaluru Governance மசோதா அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த மசோதாவுக்கு கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பெங்களூருவை 5 மண்டலங்களாக பிரிக்கும் Greater Bengaluru Governance மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பெங்களூர் நகரத்தை 3-Tier நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரும் மசோதாவை விரைவில் சட்டசபையில் தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. bangalore karnataka india

அதன்படி இது 1 முதல் 10 வரையிலான பல மாநகராட்சிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது மற்றும் 400 வார்டுகள் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவில் நிறுவனங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் முதல்வர் தலைமையில் 3 அடுக்கு நிர்வாகக் கட்டமைப்பின் உச்ச அடுக்காக நகர அளவில் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் (ஜிபிஏ) என்ற புதிய அமைப்பை உருவாக்க மசோதா முன்மொழிகிறது. bangalore capital

Also Read: இஸ்ரேல் தாக்குதலில் பலியான கர்ப்பிணி பெண் – குழந்தையை உயிரோடு காப்பாற்றிய மருத்துவர்கள்!!!

அந்த வகையில் புதிதாக உருவாக்கப்பட்ட மாதிரியில் பல மாநகராட்சிகள் மற்றும் கமிட்டிகள் 2ம் மற்றும் 3ம் அடுக்குகளை உருவாக்கும். karnataka

சுமார் 1,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் விரைவில் நடைபெற இருக்கும் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும். bengaluru

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *