ராஜஸ்தான் அணியில் சேரும் ராகுல் டிராவிட்? - 2012ல் விட்டதை இப்போது பிடிப்பாரா?ராஜஸ்தான் அணியில் சேரும் ராகுல் டிராவிட்? - 2012ல் விட்டதை இப்போது பிடிப்பாரா?

IPL 2025: ராஜஸ்தான் அணியில் சேரும் ராகுல் டிராவிட்: T20 உலகக்கோப்பை போட்டி கடந்த 2007ம் ஆண்டு தான் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது முதல் வெற்றியை முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி தலைமையில் கோப்பையை கைப்பற்றியது. அப்புறம் 17 வருடங்களுக்கு பிறகு இப்பொழுது தான் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

மேலும் இதில் சோகமான விஷயம் என்னவென்றால் இந்த வெற்றியுடன் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா  ஓய்வு பெறுவதாக தங்களது முடிவுகளை அறிவித்தனர். மேலும் இந்த வெற்றிக்கு நங்கூரமாக இருந்தவர் தான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்  ராகுல் டிராவிட். cricket news in tamil

இந்த வெற்றியுடன் அவருடைய பணி களமும் முடிவடைந்த நிலையில், அடுத்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பதவியேற்றுள்ளார். எனவே அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் IPL போட்டியில் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக  இருந்த KKR அணிக்கு ராகுல் ட்ராவிட் தலைமை பயிற்சியாளராக விளங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. rahul dravid

Also Read: திருச்சி சிறப்பு முகாமிலிருந்து இலங்கை கைதி தப்பி ஓட்டம் – ஜன்னல் கம்பியை உடைத்து பறந்த ஜெயில் பறவை!!

இந்நிலையில் இந்நிலையில் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் ராகுல் டிராவிட் என்பது குறிப்பிடத்தக்கது. Rajasthan Royals

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *