மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் - ஆதார் எண் கட்டாயம் !மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் - ஆதார் எண் கட்டாயம் !

தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் அடிப்படையில் அதன் பயனை பெற மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் இருக்க வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மக்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு திட்டங்களை தொடங்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்கு செல்ல கூடிய மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மேலும் இந்த திட்டமானது உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.tamil puthalvan thittam in tamil

அந்த வகையில் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தில் பயன் பெற ஆதார் எண் கட்டாயம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணவர்கள் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் 2024 – முதலிடத்தை பிடித்த சிங்கப்பூர் – இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

அந்துமட்டுமல்லாமல் சம்மந்தப்பட்ட பகுதியில் ஆதார் மையம் இல்லாவிடில் கல்வி நிறுவனங்களே ஆதார் மையம் அமைத்து மாணவர்கள் எளிதாக பயன் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.tn government scheme

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *