சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு தாவிய 5 நடிகைகள் - என்னது ஹன்சிகா சீரியல்ல நடிச்சிருக்காங்களா?சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு தாவிய 5 நடிகைகள் - என்னது ஹன்சிகா சீரியல்ல நடிச்சிருக்காங்களா?

சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு தாவிய 5 நடிகைகள்: தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் போலவே சீரியல் நடிகைகளுக்கும் ரசிகர்கள் இருக்கிறார். சில சீரியல் நடிகைகளுக்காகவே குடும்பத்துடன் சேர்ந்து தொடரை பார்த்து வருகிறார்கள் இளைஞர்கள். இப்படி இருக்கும் சூழ்நிலையில் சின்னத்திரையில் நம்மை குஷிப்படுத்திய சில நடிகைகள் தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்து ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அப்படி சீரியலில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்து வெற்றி வாகை சூடிய நடிகைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க,

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் பிசியான நடிகையாக இருந்து வந்த இருக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் எதையும் யோசிக்காமல் கல்யாணம் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்தும் அவர் குழந்தை நட்சத்திரமாக இருந்த போது ஹிந்தியில் ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார். அதன் பிறகே அவர் வெள்ளித்திரையில் நடித்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சீரியல் தான் தெய்வ மகள். இந்த சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை வாணி போஜன். அந்த சீரியல் அவருக்கு பேரும் புகழும் மட்டும் வாங்கி கொடுக்கவில்லை. வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பையும்  வாங்கி கொடுத்தது. அதன்படி அவர் ஓ மை கடவுளே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானதை தொடர்ந்து லாக் அப், மிரள், பாயும் ஒளி நீ எனக்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான சட்னி சாம்பார் வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

விஜய் டிவியின் ஒன் ஆப் தி பேமஸ் சீரியலில் ஒன்று தான் பகல் நிலவு. இந்த தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றவர் தான் ஷிவானி நாராயணன். இதையடுத்து பிக்பாஸ் கலந்து கொண்ட இவர் விக்ரம், வீட்ல விசேஷம், டிஎஸ்பி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

விஜய் டிவியில் நம்மை கொள்ளை அடித்த சீரியல்களில் ஒன்று தான் காதல் முதல் கல்யாணம் வரை.

இந்த தொடரில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் பிரியா பவானி சங்கர்.

இதனை தொடர்ந்து கோலிவுட் பக்கம் சென்ற அவர் நடித்த முதல் படமான மேய்த்த மான் படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

இதையடுத்து ஓ மணப்பெண்ணே படத்தின் மூலம் கடைசி சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த நிலையில் அடுத்து வெளியான எந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஏன் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் பிளாப் ஆனது. மேலும் இவர் சீரியல் வருவதற்கு முன்னர் செய்தி வாசிப்பாளராக வேலை பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் ஜெயிச்ச 7 நடிகைகள்: சௌந்தர்யா தான் வேணும்னு அடம்பிடித்த நடிகர்கள்!!

செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் தான் தர்ஷா குப்தா.

தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர், ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் படத்திலும் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *