இலங்கை ரோந்து படகு மோதி தமிழக மீனவர் உயிரிழந்த சம்பவம் - ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் !இலங்கை ரோந்து படகு மோதி தமிழக மீனவர் உயிரிழந்த சம்பவம் - ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் !

தற்போது இலங்கை ரோந்து படகு மோதி தமிழக மீனவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காலவரையின்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தினர் அறிவிப்பு.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் சுமார் 1500 பேர் 400க்கும் மேற்பட்ட விசைப்படகில் நேற்று முன்தினம் (31.07.2024) அதிகாலையில் வழக்கம் போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அந்த வகையில் கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இதனையடுத்து அங்கு வந்த இலங்கை கடற்படையினரின் ரோந்து படகு ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவரான கார்த்திகேயன் என்பவரது விசைப் படகு மீது மோதியுள்ளது.

இதனை தொடர்ந்து அந்த படகில் இருந்த ராமச்சந்திரன், மூக்கையா மலைசாமி உள்ளிட்ட 4 மீனவர்கள் கடலில் விழுந்துள்ளார். இந்த சம்பவத்தால் படுகாயமடைந்த 2 மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டு யாழ்ப்பாணம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இதில் மலைச்சாமி என்ற தமிழக மீனவர் உயிரிழந்துள்ளது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை கண்டித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் அதே சமயம் மீனவர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் இலங்கை ரோந்து படகு மோதி உயிரிழந்த தமிழக மீனவர் மலைச்சாமி குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இலங்கை ரோந்து கப்பல் மோதி உயிரிழந்த ராமேஸ்வரம் மீனவரின் உடலை தமிழகம் கொண்டு வரும் வரை போராட்டம் தொடரும் என ராமேஸ்வரம் மீனவர்கள் என தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஷாலை கண்டித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி – எதுக்கு தெரியுமா ?

அந்த வகையில் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் தமிழக மீனவர்களைக் கைது செய்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படையினரை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படும் எனவும் மீனவர்கள் அறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *