யூடியூப் சேனல்களுக்கு புதிய கட்டுப்பாடு? மத்திய அரசுக்கு பறந்த முக்கிய உத்தரவு!!யூடியூப் சேனல்களுக்கு புதிய கட்டுப்பாடு? மத்திய அரசுக்கு பறந்த முக்கிய உத்தரவு!!

Breaking News: யூடியூப் சேனல்களுக்கு புதிய கட்டுப்பாடு: சினிமாவை தாண்டி பல கலைஞர்களின் திறமையை வெளிக்காட்டுவதில் யூடியூப் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. இதன் மூலம் பல பேர் பெரிய லெவலுக்கு சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி யூடியூப் மூலம் பணம் சம்பாதித்து வருகின்றன.

ஆனால் சிலர் அதை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து  சென்னையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த எந்த நடைமுறையும் இல்லை என்று வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ” குற்ற வழக்குகளில் யூடியூப் சேனல்கள் ஊடக விசாரணை நடத்துவதால் காவல்துறையினரின் புலன் விசாரணை பாதிக்கப்படுகிறது. மேலும் யூடியூப் சேனல்களை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் உரிய நடை முறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

Also Read: தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழை வெளுக்க போகுது – வானிலை மையம் கொடுத்த அலெர்ட்!

இந்நிலையில் இந்த வழக்கு இன்று  மீண்டும் விசாரணைக்கு வந்தது. யூடியூப் சேனல்களை முறைப்படுத்த உரிய நடைமுறைகளை வகுப்பது தொடர்பாக மத்திய அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *