காதலிக்கு ஐபோன் வாங்க அடிமடியில் கையை வைத்த மாணவன் - தாயின் நகைகளை திருடிய மகன்!காதலிக்கு ஐபோன் வாங்க அடிமடியில் கையை வைத்த மாணவன் - தாயின் நகைகளை திருடிய மகன்!

Breaking News: காதலிக்கு ஐபோன் வாங்க அடிமடியில் கையை வைத்த மாணவன்: இன்றைய காலகட்டத்தில் 2k கிட்ஸ் பள்ளியில் இருந்தே காதலித்து உடனே திருமணம் செய்து கொண்டு பிற்காலத்தில் கஷ்டப்பட்டு வருகின்றனர். இப்படி இருக்கும் சூழ்நிலையில் 9ம் வகுப்பு மாணவன் தனது காதலியின் பிறந்த நாளை கொண்டாட அம்மாவின் நகையில் கையை வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலிக்கு ஐபோன் வாங்க அடிமடியில் கையை வைத்த மாணவன்

டெல்லி நஜாப்கரில் இருக்கும் ஒரு வீட்டில் இருந்து தங்க நகைகள் காணாமல் போனதை அடுத்து ஆகஸ்ட் 3ம் தேதி  சிறுவனின் தாய் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து கவ்வி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அப்போது வெளியில் இருந்து எந்த நபரும் உள்ளே செல்லாதது சிசிடிவி தெரிய வந்தது. அப்போ வீட்டுக்குள் தான் அந்த திருடன் இருக்கிறான் என்று போலீசாருக்கு தெரியவந்தது.

மேலும் அந்த வீட்டில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் சில நாட்களாக காணாமல் போனதை தொடர்ந்து காவல்துறை பள்ளிக்கூடத்திற்கு சென்று, மாணவனின் நண்பர்களிடம் விசாரணை செய்த போது, மாணவன் 50 ஆயிரம் ஐபோன் வாங்கியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்த சிறுவனை காவல்துறை வளைத்து பிடித்து விசாரணை நடத்தியதில், அந்த சிறுவன் அதே வகுப்பில் படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார்.

Also Read: கோவிலில் பால்குடம் எடுக்கும் பார்ன் நடிகை மியா கலிஃபா – சர்ச்சையை கிளப்பிய பேனர் – புகைப்படம் உள்ளே!!

அவரை பிறந்தநாளுக்கு பரிசாக கொடுக்க ஐபோன் வாங்கியுள்ளார். அது மட்டுமின்றி காதலியின் பிறந்த நாளை கொண்டாட நகைகளை திருடியதாக ஒப்புக்கொண்டதாக காவல்துறை தெரிவித்தனர். மேலும் காணாமல் போன  ஒரு தங்க மோதிரம்,  ஒரு செயின் மற்றும் ஒரு ஜோடி தங்க கம்மல்கள்  மீட்கப்பட்டது. நகையை வாங்கியவரில் ஒருவரான கமல் வர்மாவை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *