தமிழ்நாடு TNPSC தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் - அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!தமிழ்நாடு TNPSC தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் - அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Breaking News: தமிழ்நாடு TNPSC தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம்: TNPSC தேர்வாணையம் தமிழக அரசின் பல்வேறு துறையில் இருக்கும் காலி பணியிடங்களை தேர்வு நடத்தி தேர்வர்களை நிரப்பி வருகிறது. மேலும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

தமிழ்நாடு TNPSC தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம்

சமீபத்தில் TNPSC  குரூப் 4 தேர்வு நடைபெற்ற நிலையில், கூடிய விரைவில் TNPSC  குரூப் 2 தேர்வு நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவர் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது வருவாய் நிர்வாக ஆணையராக பணிபுரிந்து வந்தவர் தான் எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ். இவரை தான் தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். tnpsc

Also Read: மது பிரியர்களே ஷாக்கிங் நியூஸ் – வியாழக்கிழமை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – தமிழக அரசு உத்தரவு!!

தமிழ்நாடு அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததை அடுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்ட எஸ்.கே.பிரபாகர், பொறுப்பேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை பதவியில் இருப்பார் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. sk prabhakar ias

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

உலக யானைகள் தினம் 2024

திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு

தமிழ்நாட்டில் நாளை (13.08.2024) மின்தடை அறிவிப்பு ! 

தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சி உதயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *