TNPSC தேர்வர்களே தயாராகுங்க - தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!TNPSC தேர்வர்களே தயாராகுங்க - தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

TNPSC குரூப்-2 மற்றும் 2ஏ: TNPSC தேர்வாணையம் அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 1, 2 மற்றும் 4 உள்ளிட்ட பல தேர்வுகளை நடத்தி ஊழியர்களை தேர்ந்தெடுத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் குரூப் 4 தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து குரூப்-2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை, கடந்த ஜூன் 20-ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

மேலும் அந்த அறிவிப்பில் குரூப்-2 தேர்வில்  507 பணியிடங்கள், 2ஏ தேர்வுகளில் 1,820 இடங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து முதல்நிலைத் தேர்வு வருகிற செப்டம்பர் 14-ஆம் தேதி நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இப்படி இருக்கையில் தேர்வு தேதி செப்டம்பர் 14-க்கு பதிலாக 28ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்றும்,  2,327ஆக இருந்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, 2030 ஆக குறைக்கப்பட்டு டி.என்.பி.எஸ்.சி. ஆண்டு அட்டவணையில் வெளியான தேர்வர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் – விவசாயிகளின் 60 ஆண்டு கனவு நிறைவேறியது!!

இந்நிலையில்  டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ” தேர்வு தேதி எந்தவித மாற்றமும் இல்லை, அடுத்த மாதம் செப்டம்பர் 14-ஆம் தேதி  முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார். tnpsc group 2 and 2a exam date

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

இனி பஸ்ல ஜாதி பாடல்கள் போட்டால் ஜெயில் தான்

கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு விவகாரம்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அலோபதி மருந்துகளால் 10 கோடி மக்கள் கொலை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *