மதுரை மாநகரில் கடந்த 50 நாட்களில் 126 ரவுடிகள் கைது - அரிவாள், கத்தி ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து காவல்துறை நடவடிக்கை !மதுரை மாநகரில் கடந்த 50 நாட்களில் 126 ரவுடிகள் கைது - அரிவாள், கத்தி ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து காவல்துறை நடவடிக்கை !

தற்போது மதுரை மாநகரில் கடந்த 50 நாட்களில் 126 ரவுடிகள் கைது செய்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரிவாள், கத்தி ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து வழிப்பறி, வணிகர்களை மிரட்டி மாமுல் கேட்டபது போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

மதுரை மாநகரில் கடந்த 50 நாட்களில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 126 ரவுடிகளை கைது செய்து காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில் தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில், குற்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெறும் இடங்களை கண்டறிந்து அந்த பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் இருசக்கர வாகனம் ரோந்து பணிகளில் ஈடுபட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அர்விந்த் அறிவுறுத்தினார்.

இதன் அடிப்படையில் மதுரையில் அலங்காநல்லூர் போலீஸ் சரகம் மற்றும் நாகமலை புதுக்கோட்டை போலீஸ் நிலைய சரகம் போன்ற முக்கிய போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்,

துப்பாக்கி ஏந்திய போலீசார் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று சட்ட விரோத செயல்கள் பற்றியும், சமூக விரோதிகளின் நடமாட்டம் பற்றியும் கண்காணித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து கடந்த 50 நாட்களில் மதுரை மாநகரில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த 126 ரவுடிகளை கைது செய்து காவல்துறை நடவடிக்கை அதிரடி எடுத்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் கைது – என்ன நடந்தது?

இந்த கைது நடவடிக்கையில் 30 வயதிற்கு கீழுள்ள இளைஞர்கள் 100 பேரும், 30 வயதுக்கு மேற்பட்ட 16 பேரும் அடங்குவர்.

அந்த வகையில் வழிப்பறி நோக்கத்தோடு கத்தியுடன் சுற்றி திரிந்தது, வணிகர்களை மிரட்டி மாமுல் கேட்டபது போன்ற குற்றங்கள் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *