மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகை நமீதா சாமி தரிசனம் - அதிகாரிகள் தன்னை அவமரியாதை செய்ததாக குற்றசாட்டு !மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகை நமீதா சாமி தரிசனம் - அதிகாரிகள் தன்னை அவமரியாதை செய்ததாக குற்றசாட்டு !

தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகை நமீதா சாமி தரிசனம் செய்ய வந்த நிலையில் அதிகாரிகள் தன்னை அவமரியாதை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதனை வீடியோவாக பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் 90 களின் காலகட்டத்தில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை நமீதா. தற்போது அவர் சினிமாவில் இருந்து விலகி தற்போது திருமணம் செய்து கொண்டு தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அத்துடன் அரசியலில் பாஜக கட்சியில் தன்னை இணைத்து கொண்டு தமிழக அரசியலில் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Actress Namitha darshan at Madurai Meenakshi Amman Temple

இந்நிலையில் நடிகை நமீதா இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தனது கணவருடன் சாமி தரிசனம் செய்ய வந்ததாகவும், மேலும் அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி இந்து என்பதற்கான சான்றிதழை காட்டுமாறு கேட்டு அவமரியாதை செய்ததாகவும் நடிகை நமீதா குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் கோரிக்கை விடுத்து விடியோவும் வெளியிட்டுள்ளார்.

நடிகர் தர்ஷனுக்கு சிறையில் சொகுசு வசதிகள் –  7 சிறை அதிகாரியை சஸ்பெண்ட் செய்த அரசு!

இதனையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த தன்னை அவமரியாதை செய்ததாக நடிகையும், பாஜக பிரமுகருமான நமீதா தெரிவித்த குற்றச்சாட்டை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. அதில் முக்கிய நபராக சாமி தரிசனம் செய்ய வந்தவரிடம் விவரங்கள் கேட்கப்பட்டு தரிசனத்திற்கு அனுப்பப்பட்டதாக கோவில் நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *