பிரபல கிரிக்கெட் அணிக்கு உரிமையாளராகும் நடிகை கீர்த்தி சுரேஷ் - அதுவும் எந்த டீம் தெரியுமா?பிரபல கிரிக்கெட் அணிக்கு உரிமையாளராகும் நடிகை கீர்த்தி சுரேஷ் - அதுவும் எந்த டீம் தெரியுமா?

பிரபல கிரிக்கெட் அணிக்கு உரிமையாளராகும் நடிகை கீர்த்தி சுரேஷ்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக இருந்து வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ரகுதாத்தா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

பிரபல கிரிக்கெட் அணிக்கு உரிமையாளராகும் நடிகை கீர்த்தி சுரேஷ்

இதனை தொடர்ந்து ரிவால்வர் ரீட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பையும் தாண்டி, தற்போது  இவர் புதிதாக கிரிக்கெட் அணியையும் வாங்கியுள்ளார்.

அதாவது, ”  இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு பெரும் ரசிகர்கள் இருந்து வருகிறார். அதை காரணம் கட்டி தான் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் IPL போட்டி கொண்டு வரப்பட்டது.

மேலும் இந்த அணிகள் அனைத்தையும் பிரபல நடிகர்கள், தொழிலதிபர்கள் உரிமையாளராக இருந்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து மாநில கிரிக்கெட் சங்கங்கள் கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கேரளாவில் ஆறு நகரங்களின் பெயர்களில் அணிகள் உருவாக்கப்பட்டு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட இருக்கிறது. அதன்படி அடுத்த மாதம் முதல் கேரளா கிரிக்கெட் லீக்(Kerala Cricket League) கேரள கிரிக்கெட் சங்கம் நடத்த இருக்கிறது. keerthy suresh

Also Read: பொங்கல் பண்டிகை 2025 – தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் திருவனந்தபுரம் ராயல்ஸ் (Trivandrum Royals) என்ற அணியின் இணை உரிமையாளராக இணைந்துள்ளார். மேலும் இந்த அணியின் மற்றொரு இணை உரிமையாளராக நடிகை கல்யாணி பிரியதர்சனும் இணைந்துள்ளார். ஏற்கனவே கேரள பெண்கள் கிரிக்கெட் அணிக்கான விளம்பர தூதுவராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் கிரிக்கெட் அணியை வாங்கி இருப்பது அனைவரது மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. மேலும் இந்த போட்டிக்கு விளம்பர தூதராக நடிகர் மோகன்லால் செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. trivandrum royals

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

மக்களே ஜாக்கிரதை – AC மூலம்  பரவும் உயிர்கொல்லி நோய் 

கேரளாவில் இந்த 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் நாளை (29.08.2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

என்னது ஆண் இனம் முடிவுக்கு வருகிறதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *