ஒலிம்பிக் வீராங்கனையை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய ஆசை காதலன் - கடைசியில் நேர்ந்தது என்ன?ஒலிம்பிக் வீராங்கனையை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய ஆசை காதலன் - கடைசியில் நேர்ந்தது என்ன?

ஒலிம்பிக் வீராங்கனையை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய ஆசை காதலன்: சமீபத்தில் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு விளையாடியவர் தான்  ரெபேக்கா செப்டேகி (Rebecca Cheptegi). உகாண்டா நாட்டை சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனையான இவர் மாரத்தான் பிரிவில் கலந்து கொண்டு ஓடி 44 வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியில் தனது அபார திறமையை வெளிக்காட்டிய அவர் போட்டி முடிந்தவுடன் கென்யாவில் இருக்கும் அவருடைய வீட்டில்  ஓய்வில் இருந்துள்ளார். மேலும் அவர் டேனியல் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. அந்த வகையில் நேற்று அவருக்கும் காதலன் டேனியலுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததாக தெரிகிறது.

ஒலிம்பிக் வீராங்கனையை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய ஆசை காதலன்

இதில் ஆத்திரமடைந்த டேனியல் தனது காதலி என்று கூட பாராமல் ரெபேக்கா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். தீ அவரின் உடல் முழுவதும் பரவிய நிலையில் தன்னை காப்பாற்றுமாறு கத்தி கூப்பாடு போட்டுள்ளார். ஆனால் அதே சமயம் டேனியல் உடலிலும் தீ பற்றியது.

Also Read: பாராலிம்பிக்கில் வரலாற்று சாதனை படைத்த மாரியப்பன் – தொடர்ந்து 3 முறை பதக்கம் – தமிழக முதல்வர் வாழ்த்து!!

இதில் ரெபேக்காவுக்கு 75 சதவீதம் தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே போல் டேனியலுக்கும் சிறிய அளவிலான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. olympic player Rebecca Chepte

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு

PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்

குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்

HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *