தவெக மாநாடு பற்றி இரண்டு நாட்களில் முடிவு - பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல்தவெக மாநாடு பற்றி இரண்டு நாட்களில் முடிவு - பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல்

நடிகர் விஜய்யின் தவெக மாநாடு பற்றி இரண்டு நாட்களில் முடிவு தெரிந்து விடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற அனுமதி கோரி காவல்துறையிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்திருந்தார்.

அத்துடன் மாநாட்டுக்கு அனுமதி கேட்டுள்ள இடமானது தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ளதால் அனுமதி வழங்கப்படுமா என்ற ஒரு சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அதை எல்லாம் பொருட்படுத்தாமல் மாநாட்டுப் பணிகளை அக்கட்சியின் நிர்வாகிகள் தொடங்கியுள்ளனர்.

இதனையடுத்து விழுப்புரம் காவல்துறை ஆணையர் தரப்பிலிருந்து 21 கேள்விகளுக்கு விளக்கம் அளிக்குமாறு விஜய் கட்சி நிர்வாகிகளை காவல்துறை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் விக்கிரவாண்டியில் மாநாடு நடக்க உள்ள மைதானம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ளது. அதேபோல் ரயில்வே பாதையிலிருந்தும் மிக அருகில் உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. எனவே காவல்துறை தரப்பிலிருந்து உரிய விளக்கத்தைக் கேட்டுள்ளனர்.

தற்போது தமிழக வெற்றிக் கழக மாநாடு குறித்து காவல்துறையினர் கேட்டிருந்த 21 கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளோம் என்றும் காவல் துறை மேல் அதிகாரிகளிடம் பேசிவிட்டு இன்னும் இரண்டு நாட்களில் முடிவை தெரிவிப்பதாக கூறியுள்ளனர் என்று பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

GOAT திரைப்படத்தின் முதல் நாள் வசூல் – ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

மேலும் காவல் துறையிடமிருந்து பதில் வந்த பின்னர் மாநாடு தேதி குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின்தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *