மதுரை மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 3  ஆக உயர்வு!!மதுரை மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 3  ஆக உயர்வு!!

மதுரை விசாகா மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம்: மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் என்ற பகுதியில் விசாகா பெண்கள் தங்கு விடுதி இயங்கி வருகிறது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த மகளிர் விடுதியில் கடந்த 12ஆம் தேதி பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது.

மதுரை விசாகா மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம்

இந்த தீ விபத்தில் 2  பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி அந்த விபத்தில் ஏற்பட்ட கரும்புகையில் 3 பெண்கள் சிக்கி மூச்சு திணறல் துடிதுடித்த நிலையில் அவர்களை மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்த நிலையில், அந்த மகளிர் விடுதி மிகவும் பழமையானது என்பதால் அதை உடனே இடிக்க வேண்டும் என்று மதுரை மாநகராட்சி கடந்த வருடமே நோட்டீஸ் அனுப்பியும் கூட அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளது.

Also Read: கூகுள் நிறுவனம் விடுத்த முக்கிய எச்சரிக்கை – இத மட்டும் செய்யலைனா ஜிமெயில் அக்கவுண்ட் டெலிட் தான்!

விடுதியை நடத்தி வந்த இன்பா ஜெகதீஷ் மற்றும் விடுதி காப்பாளரான புஷ்பா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். தற்போது தான் அந்த கட்டிடத்தை இடித்துள்ளது. இந்நிலையில், தீ விபத்தில் படுகாயமடைந்த வார்டன் புஷ்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தூக்கிலிடும் முன் கைதி காதில் சொல்லப்படும் வார்த்தை என்ன தெரியுமா?

தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிக்கு போதையில் வந்த மாணவி – கடைசியில் நேர்ந்த டிவிஸ்ட்!

திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *