சத்துணவு முட்டைகளை பயன்படுத்திய தனியார் உணவகத்திற்கு சீல் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு !சத்துணவு முட்டைகளை பயன்படுத்திய தனியார் உணவகத்திற்கு சீல் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு !

திருச்சியில் சத்துணவு முட்டைகளை பயன்படுத்திய தனியார் உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சி தலைவர் அதிகாரிகளுக்கு உத்தரவு

திருச்சி துறையூரில் தனியார் உணவகம் ஒன்றில் சோதனை செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அங்கிருந்த அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாடு அரசு சார்பில் அரசுப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டைகளை பயன்படுத்திய திருச்சி துறையுறை சேர்ந்த தனியார் உணவகத்திற்கு தற்போது திருச்சி மாவட்ட ஆட்சி தலைவரின் உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் – சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றசாட்டு !

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சத்துணவு முட்டைகளை தனியார் ஹோட்டலுக்கு கொடுத்தது யார் என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *