பாலியல் புகாரில் சிக்கிய நடன இயக்குநர் ஜானி கைது - போலீசார் நடவடிக்கை !பாலியல் புகாரில் சிக்கிய நடன இயக்குநர் ஜானி கைது - போலீசார் நடவடிக்கை !

பெண் நடனக்கலைஞர் அளித்த பாலியல் புகாரில் சிக்கிய நடன இயக்குநர் ஜானி கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில் தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டர் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் ஜானி. அந்த வகையில் இவரது நடன குழுவில் உள்ள 21 வயது பெண் ஒருவர் ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என புகார் தெரிவித்துள்ளார். மேலும் இந்த புகாரின் அடிப்படையில், ஜானி மாஸ்டர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து இவர் கைது செய்யப்படுவார் என செய்திகள் பரவிசயதையடுத்து உடனே ஜானி மாஸ்டர் தலைமறைவானார்.

இதனையடுத்து பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது தற்போது போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமறைவான ஜானி மாஸ்டரை கைது செய்ய நான்கு தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டனர்.

அந்த வகையில் அவர் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து ஹைதராபாத் போலீசார் பெங்களூருவில் வைத்து ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டு அங்கிருந்து அவர் ஹைதராபாத் அழைத்துச் சென்றுள்ளனர்.

வேலூர் அரசுப்பள்ளியில் வளைகாப்பு நடத்தி ரீல்ஸ் வெளியிட்ட மாணவிகள் – கல்வி அதிகாரி விசாரணை !

இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே தெலுங்கு படங்களில் பணியாற்ற ஜானி மாஸ்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பும் இதுபோல் ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார் கூறப்பட்டது. அத்துடன் அதன் அடிப்படையில் அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *