இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து அனுப்பப்படும் முக்கிய வீரர் - பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து அனுப்பப்படும் முக்கிய வீரர் - பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!

இந்திய அணியின் முக்கிய வீரர் சர்ப்ராஸ்கான் டெஸ்ட் போட்டியில் இருந்து விடுவிக்கப்பட இருப்பதாக முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் முக்கிய வீரர் சர்ப்ராஸ்கான்

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான 1வது டெஸ்ட் போட்டி சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து  2வது டெஸ்ட் போட்டி வருகிற செப்  27 ஆம் தேதி கான்பூரில் இருக்கும் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் இராணி கோப்பை போட்டியும் நடக்க இருக்கிறது. எனவே இந்த இராணி கோப்பை போட்டியில் இந்தியாவின் முக்கிய வீரர் ஒருவரை விளையாட விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது வேற யாரும் இல்லை. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் என்ட்ரி கொடுத்து சிறப்பாக விளையாடிய சர்ப்ராஸ்கான் தான்.

தற்போது நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் இடம்பெற்றுள்ளார். ஆனால் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இராணி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வைக்க இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பது குற்றம்

சேலம் – தஞ்சாவூரில் டைடல் நியோ பார்க்

இனி பிரசாதம் தயாரிக்க இந்த நெய்தான் –  அரசு போட்ட அதிரடி உத்தரவு!

கல்யாணத்திற்கு பிறகு வீட்டோட மாப்பிள்ளையாக செல்லும் ஆண்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *