பிரபல யூடியூபரான ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு - பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை !பிரபல யூடியூபரான ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு - பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை !

தற்போது பிரபல யூடியூபரான ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யூடியூபர் தன்னை பணத்துக்காக ஏமாற்றிவிட்டதாகக் கூறி பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. youtuber harsha sai

தற்போது பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கனாவில் பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது போலீஸ் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

25 வயது நடிகை நரசிங்கி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் ஹர்ஷா சாய் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் உறவு கொண்டதுடன், நிர்வாண புகைப்படங்களை வைத்து மிரட்டி தன்னிடம் இருந்து 2 கோடி ரூபாய் பெற்றதாக அந்த பெண் கூறியுள்ளார். மேலும் அவர் ஹர்ஷா சாய் மற்றும் அவரது தந்தை ராதா கிருஷ்ணா மீது புகார் அளித்தார்.

பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினர் நடிகர் கார்த்தி – எதற்கு தெரியுமா ?

இதையடுத்து சம்பந்தப்பட்ட பெண் ஹர்ஷா சாயியுடன் ஒரு படத்தைத் தயாரித்துள்ளார், மேலும் அது அவரது முதல் படமாகும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் யூடியூபர் தன்னை பணத்துக்காக ஏமாற்றிவிட்டதாகக் கூறி அவர் தனது வழக்கறிஞருடன் போலீஸை அணுகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *