மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் ஆசிரியர் - கோவையை புரட்டி போட்ட சம்பவம்!மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் ஆசிரியர் - கோவையை புரட்டி போட்ட சம்பவம்!

கோவை மாவட்டம் கோவில்பாளையம் தனியார்ப் பள்ளி ஆசிரியை ஒருவர் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

கோவை:

இன்றைய காலகட்டத்தில் சோசியல் மீடியாவில் எந்த பக்கம் சென்றாலும் அதிகமான செய்திகள் பாலியல் தொந்தரவு குறித்து தான் வெளியாகி வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுக்கும் சம்பவம் தான் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

இப்படி இருக்கையில் ஒரு மாணவிக்கு பெண் ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோவை மாவட்டம் கோவில்பாளையம் என்ற பகுதியில் தனியார்ப் பள்ளி ஒன்று இயங்கி வரும் நிலையில், இந்த பள்ளியில் சவுந்தர்யா என்பவர் சமூக அறிவியல் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

கோவில்பாளையம் மாணவிக்கு பாலியல் தொல்லை

இவர் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இப்படி இருக்கையில் அந்த ஆசிரியர், மாணவியை தனியாக வெளியே அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இந்த விஷத்தை உடனே தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

Also Read: பழைய 2 ரூபாய் நோட்டு இருக்குதா? அப்ப நீங்களும் ஆகலாம் லட்சாதிபதி – எப்படி தெரியுமா?

இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து அந்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ஒரு மாணவிக்கு பெண் ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

உபியில் கோவில்களில் இனிப்பு பிரசாதத்திற்கு தடை

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ் 

தீபாவளி பண்டிகை 2024 – 5975 சிறப்பு ரயில்கள் – மத்திய அமைச்சர் அறிவிப்பு

பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *