CWC 5ல் டைட்டில் வென்ற பிரியங்கா - மணிமேகலை போட்ட அதிரடி பதிவு - என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?CWC 5ல் டைட்டில் வென்ற பிரியங்கா - மணிமேகலை போட்ட அதிரடி பதிவு - என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?

குக் வித் கோமாளி சீசன் (CWC)5ல் பிரியங்கா டைட்டில் வென்ற நிலையில் தற்போது மணிமேகலை அதிரடி பதிவை வெளியிட்டுள்ளார்.

மணிமேகலை CWC:

குக் வித் கோமாளி சீசன் 5ல் தொகுப்பாளினியாக இருந்து வந்த மணிமேகலை திடீரென ஷோவை விட்டு வெளியேறிய விஷயம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. அவர் வெளியேறுவதற்கு முக்கிய காரணம் பிரியங்கா தான் என்ற அவர் மறைமுகமாக கூறிய பின்னர் தான் சர்ச்சை பூதாகரமாக வெடித்தது.

அதுமட்டுமின்றி சோசியல் மீடியாவில் இருவரின் ரசிகர்களும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தனர். இந்நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5ன் பைனல் போட்டி நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த சீசன் டைட்டிலை பிரியங்கா வென்றார். அவருக்கு 5 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது.

எனவே  பலரும் பிரியங்காவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பிரியங்கா ஷோவை முடித்த பிறகு வெளிநாட்டுக்கு சென்று விட்டார். அங்கு அவர் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Also Read: தவெக கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்திடம் பெண் வாக்குவாதம் – கடைசியில் நடந்தது என்ன?

இப்படி இருக்கையில் மணிமேகலை தற்போது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் புதிதாக கட்டி வரும் பண்ணை பண்ணை வீட்டின் புகைப்படத்தை வெளியிட்டு, “இந்த இடம் தான் தனக்கு மகிழ்ச்சியும், சந்தோஷமும் தருகிறது” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

விஜய்யின் தவெக முதல் மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு?

விஜய்யின் தவெக கட்சி முதல் மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்கிறாரா?

10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் அஜித்

ஆர்த்தி மீது போலீசில் புகார் கொடுத்த ஜெயம் ரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *