லெபனான் மீது Operation Northern Arrows தரைவழித் தாக்குதல் - இஸ்ரேல் ராணுவத்தின் செயலால் பலி எண்ணிக்கை உயர்வு !லெபனான் மீது Operation Northern Arrows தரைவழித் தாக்குதல் - இஸ்ரேல் ராணுவத்தின் செயலால் பலி எண்ணிக்கை உயர்வு !

தஹ்ரபோது லெபனான் மீது Operation Northern Arrows தரைவழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம். அந்த வகையில் இந்த தரைவழி தாக்குதல் மூலம் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு. Operation Northern Arrows

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த ஓராண்டு காலமாக போர்நடைபெற்று வருகிறது, இந்நிலையில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக களமிறங்கிய லெபனான் எல்லையில் செயல்பட்டு வரும் ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் வடக்கு பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இஸ்ரேல் நாட்டின் பொதுமக்கள் சிலர் பலியாகினர். israel army launched Operation Northern Arrows ground attack on Lebanon

ஹெஸ்புல்லா அமைப்பு நடத்திய தாக்குதல் காரணமாக இஸ்ரேல்வடக்கு பிராந்தியங்களில் இருந்து மக்களை வெளியேற்றிய நிலையில் தற்போது லெபனான் எல்லைப்பகுதிகளில் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக வான்வழி தாக்குதலில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் ராணுவம், தற்போது ‘ஆபரேஷன் நார்தன் ஏரோவ்ஸ் (Operation Northern Arrows)’ என்ற தரைவழித் தாக்குதலை தொடங்கியுள்ளது.

அக்டோபர் 1 முதல் சிலிண்டர் விலை ரூ1903 ஆக உயர்வு – அதிர்ச்சியில் மக்கள்!

இதையடுத்து லெபனான் மீது வான்வழி மற்றும் தரைவழியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கையானது தற்போது 1000-ஐ கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 95 பேர் பலியாகியுள்ளதாக வெளியான செய்தி உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *