டெல்லி மருத்துவர் கொலை வழக்கு: ஒரு சிறுவன் கைது - போலீஸ் அதிரடி!டெல்லி மருத்துவர் கொலை வழக்கு: ஒரு சிறுவன் கைது - போலீஸ் அதிரடி!

டெல்லி: ஒரு மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவரை சுட்டுக் கொலை செய்த வழக்கு தொடர்பாக 18 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவனை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லியில் இருக்கும் ஜெய்த்பூர் என்ற பகுதியில் நீமா மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு தினசரி நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

டெல்லி மருத்துவர் கொலை வழக்கு

இப்படி இருக்கையில் கடந்த புதன்கிழமை நள்ளிரவில் 2 சிறுவர்கள் தங்களுக்கு விபத்து சேர்ந்ததாகவும் இதில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  மேலும் மருத்துவர் ஜாவேத்தை பார்க்க வேண்டும் என்ற அந்த சிறுவர்கள் கூறிய நிலையில், அவர்களை ஊழியர்கள் மருத்துவர் அறைக்கு அழைத்து சென்றனர்.

அவர்கள் ரூமுக்குள் நுழைந்த அடுத்த நொடியே மருத்துவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தது.

Also Read: பாலியல் செய்ததை ஒப்புக் கொண்ட ஜானி மாஸ்டர்? வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்நிலையில், மருத்துவரை கொலை செய்த வழக்கில் ஈடுபட்ட ஒரு சிறுவனைக் போலீஸ் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் அந்த சிறுவன் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இன்னொரு சிறுவனை தீவிரமாக தேடி வருவதாக போலீஸ் கூறியுள்ளது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தமிழகத்தில் இந்த 15 மாவட்டங்களில் கனமழை

மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசிய வழக்கு

திருமலைக்கு பாதயாத்திரை சென்ற பவன் கல்யாண்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – ஆன்லைன் வகுப்பு எடுத்தால் நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *