பாடகி பி.சுசீலா - கவிஞர் மேத்தாவிற்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது - முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் !பாடகி பி.சுசீலா - கவிஞர் மேத்தாவிற்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது - முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் !

பாடகி பி.சுசீலா – கவிஞர் மேத்தாவிற்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது வழங்கி சிறப்பித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின், அந்த வகையில் 10 லட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவை போற்றிடும் வகையில் கவிஞர் மேத்தா, பின்னணிப் பாடகி பி. சுசீலா ஆகியோருக்கு, ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள்’ வழங்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு,

10 லட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்படும் என்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் கலைத்துறை வித்தகர் விருது கவிஞர் மு.மேத்தா மற்றும் பின்னணிப் பாடகி சுசீலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. inger P.Susheela – Poet Mehta Kalaignar Memorial Kalaithurai Vithakar Viruthu Awarded by Chief Minister Stalin

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் 2024 – நவம்பரில் தொடக்கம் !

இதனை தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் பாடகி சுசிலாவுக்கு விருதை தமிழக முதல்வர் வழங்கினார்.

உடன் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் சுசிலாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *