நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு - நீதிமன்றம் உத்தரவு !நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு - நீதிமன்றம் உத்தரவு !

தற்போது நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு இவர்கள் தாக்கல் செய்த மனு இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அந்த வகையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து திருமணமாகி 20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி, தற்போது பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தனர். மேலும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே தனித்தனியாக வாழ்ந்த வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இந்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டனர்.

அந்த வகையில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் விவகாரத்து கோரி இருவரும் மனு தாக்கல் செய்தனர். தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தங்கள் திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

தவெக முதல் மாநாடு நடக்குமா? தலைவர் விஜய்க்கு வந்த புதிய சிக்கல்!

இந்நிலையில் இவர்கள் தாக்கல் செய்த மனு இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அனால் இந்த வழக்கு விசாரணைக்கு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவருமே ஆஜராகாததால், இந்த வழக்கின் விசாரணையை வரும் 19 ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *