ஆவின் பச்சை நிற பாலின் உற்பத்தி நிறுத்தம் - ஆவின் நிறுவனம் விளக்கம் !ஆவின் பச்சை நிற பாலின் உற்பத்தி நிறுத்தம் - ஆவின் நிறுவனம் விளக்கம் !

தற்போது ஆவின் பச்சை நிற பாலின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டதை எழுந்து குற்றசாட்டை தொடர்ந்து இது தொடர்பாக ஆவின் நிறுவனம் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆவின் நிறுவனம் நிலைப்படுத்தப்பட்ட பாலின் (பச்சை நிற பால் ) விற்பனை குறைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தம் என்று எந்தவொரு முடிவையும் எடுக்க வில்லை என்று ஆவின் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

அந்த வகையில் மக்கள் நலன் கருதி எதிர்வரும் பால் தேவையை கருத்தில் கொண்டு மற்றும் பால் சந்தையில் அனைவரும் விரும்பும் வகையில் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட மற்றும் இதர கொழுப்புச்சத்துக்களை சற்று உயர்த்தி புதிய வகையான பாலினை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் பொது மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட உள்ளது. மேலும் எந்த விதமான புதிய வகை பாலையும் இதுவரை ஆவின் விற்பனை செய்ய தொடங்கவில்லை என்பதை தெரிவித்துகொள்ள்கிறோம்.

தீபாவளியை முன்னிட்டு 3500 மது கடைகளில் கூடுதல் கவுண்டர் – டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!

அத்துடன் ஆவின் நிறுவனம் புதிய வகையான பால் விற்பனை தொடங்கும் பட்சத்தில் அனைத்து ஊடகங்களுக்கும் தெரிவித்த பின்னரே தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *