Home » செய்திகள் » வங்கித் தேர்வுகள் நாளை நடைபெறாது – IIBF அமைப்பு அறிவிப்பு !

வங்கித் தேர்வுகள் நாளை நடைபெறாது – IIBF அமைப்பு அறிவிப்பு !

வங்கித் தேர்வுகள் நாளை நடைபெறாது - IIBF அமைப்பு அறிவிப்பு !

ஃபெஞ்சல் புயல் காரணமாக வங்கித் தேர்வுகள் நாளை நடைபெறாது என்று இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் & ஃபைனான்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபெஞ்சல் புயல் சற்றுமுன் 100 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கு திசையில் நிலை கொண்டிருந்தது. இந்நிலையில் தற்போது அந்த புயல் 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே போல் மகாபலிபுரத்தில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் நிலை கொண்டிருப்பதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

சென்னையில் நாளை நடைபெற இருந்த வங்கி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது . அதனை போல் நாளையும் கனமழை நீடிக்கக்கூடும் எனக்கருதப்படுகிறது.

சென்ட்ரலுக்கு மாற்றாக கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் – முழு விவரம் இதோ !

இதனை கவனத்தில் கொண்டு நாளை நடைபெற இருந்த வங்கி தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய தேதி பிறகு அறிவிக்கப்படும் என்று இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் & ஃபைனான்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top