ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், கள்ளக்குறிச்சி மாவட்ட திட்ட அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குழந்தைகள் மையங்களின் ஆட்சேர்ப்பு 2025 மூலம் காலியாக உள்ள 138 அங்கன்வாடி பணியாளர்கள், 14 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 133 அங்கன்வாடி உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் அனைத்தும் நேரடி நியமனம் செய்யப்படவுள்ளது. இதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்டாரங்கள் வாரியாக நேரடி நியமனம் செய்யப்பட உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் எண்ணிக்கை மற்றும் இனசுழற்ச்சி விவரம் அனைத்தும் மாவட்ட திட்ட அலுவலகத்திலும், அந்தந்த வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்திலும் முறையாக தகவல் தெரிவிக்கப்படும். மேலும் இந்த பதவிகளுக்கான விண்ணப்பத்தினை அதிகாரபூர்வ கள்ளக்குறிச்சி மாவட்ட இணையதளத்தின் வழியாக பெற்றுக்கொள்ளலாம்.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
அங்கன்வாடி பணியாளர்கள் – 138
குறு அங்கன்வாடி பணியாளர்கள் – 14
அங்கன்வாடி உதவியாளர்கள் – 133
சம்பள விவரம்:
திட்ட அலுவலக அங்கன்வாடி பணியாளர்கள் காலியிடங்களுக்கு Rs.7700 முதல் Rs.24200 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்
அத்துடன் குறு அங்கன்வாடி பணியாளர்கள் பதவிகளுக்கு Rs.5700 முதல் Rs.18000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்
மேலும் அங்கன்வாடி உதவியாளர்கள் பணிகளுக்கு Rs.4100 முதல் Rs.12500 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குறு அங்கன்வாடி 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
அங்கன்வாடி உதவியாளர்கள் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
அத்துடன் தமிழ் சரளமாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயது நிர்ணயம்:
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர்கள்,
குறைந்தது 25 வயதிலிருந்து அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
விதவைகள் / ஆதரவற்ற பெண்கள் / SC & ST பிரிவினருக்கு: 25 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை இருக்க வேண்டும்
மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு: 25 வயது முதல் 38 வயது வரை இருக்க வேண்டும்.
அங்கன்வாடி உதவியாளர்கள்,
குறைந்தது 20 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை இருக்க வேண்டும்
விதவைகள் / ஆதரவற்ற பெண்கள் / SC & ST பிரிவினருக்கு: 20 வயது முதல் 45 வயது வரை இருக்க வேண்டும்
மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பதாரர்களுக்கு: 20 வயது முதல் 43 வயது வரை இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்டாரங்கள் வாரியாக நேரடி நியமனம் செய்யப்பட உள்ளனர்
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான பள்ளி மாற்று சான்றிதழ், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை இணைத்து சம்மந்தப்பட்ட வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்
தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை வேலைவாய்ப்பு 2025! தகுதி: 12 ஆம் வகுப்பு || 29 காலியிடங்கள் அறிவிப்பு
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 07.04.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 23.04.2025
தேர்வு செய்யும் முறை:
வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்ட அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பித்த நபர்கள் நேரடியாக நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
எந்தவொரு விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
இப்பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மேலும் பெண்களுக்கு கள்ளக்குறிச்சி அங்கன்வாடி ஆட்சேர்ப்பு 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு 2025! 69 MTS, Assistant, DEO பதவிகள் அறிவிப்பு!
NPCIL நிறுவனத்தில் 400 காலியிடங்கள் அறிவிப்பு 2025! Executive Post! சம்பளம்: Rs.74,000/-
சென்னை அங்கன்வாடி ஆட்சேர்ப்பு 2025! 308 காலியிடங்கள் – தகுதி: 10th 12th தேர்ச்சி போதும்!
APEDA வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆணையத்தில் வேலை 2025! Salary: Rs.50,000 to Rs.60,000/-
திண்டுக்கல் மாவட்டத்தில் 81 அங்கன்வாடி காலியிடங்கள் 2025 – தகுதி: 10th 12th பெண்களுக்கான அரசு வேலை