KGF பட ராக் ஸ்டாருக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்.., அனாமத்தா போன மூன்று உயிர்.., என்ன நடந்தது?KGF பட ராக் ஸ்டாருக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்.., அனாமத்தா போன மூன்று உயிர்.., என்ன நடந்தது?

இன்றைய காலகட்டத்தில் எந்த விசேஷம் அல்லது நிகழ்ச்சியாக இருந்தாலும் பேனர் வைக்கும் பழக்கம் அதிகமாக நிலவி வருகிறது. குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் போதும் 150 அடிக்கும் கடவுட் வைக்கிறார்கள். அது உயிருக்கு ஆபத்தாகும் வகையில் இருந்தாலும் கூட ரசிகர்கள் இந்த காரியங்களை செய்து வருகின்றனர். இதனால் சில உயிர்கள் பிரிந்தது குறிப்பிடத்தக்கது. எனவே பேனர் மற்றும் கட் அவுட் உள்ளிட்டவைகளை அனுமதி இல்லாமல் வைக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கன்னட ராக் ஸ்டார் யாஷ்
கன்னட ராக் ஸ்டார் யாஷ்

இந்நிலையில் கன்னட ராக் ஸ்டார் யாஷ் பிறந்த நாளையொட்டி அவருடைய ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு ரெடியாகி வருகின்றனர். இதனை தொடர்ந்து யாஷ் உருவ பேனரை சூரனகி என்ற கிராமத்தில் ஒரு மணி அளவில் கட்டி கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் கடக் மாவட்டத்தைச் சேர்ந்த ஹனுமந்த் (24), முரளி (20), நவீன் (20) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களை காப்பாற்ற முயற்சி செய்த மூவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் யாஷ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *