மீண்டும் அண்ணனை எதிர்த்து நின்ற தம்பி கதிர்.., ஆவேசமாக மருமகள்களை வெட்ட வந்த விசலாட்சி., பரபரப்பு உச்சத்தில் எதிர்நீச்சல் சீரியல்!!மீண்டும் அண்ணனை எதிர்த்து நின்ற தம்பி கதிர்.., ஆவேசமாக மருமகள்களை வெட்ட வந்த விசலாட்சி., பரபரப்பு உச்சத்தில் எதிர்நீச்சல் சீரியல்!!

சீரியல்களுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்றால் அது கண்டிப்பாக எதிர்நீச்சல் தான். திருச்செல்வம் இயக்கி வரும் இந்த தொடர் ஆரம்பித்த கொஞ்ச நாளிலே தொடர்ந்து டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்து வந்தது. அதற்கு முதல் காரணமாக இருந்தவர் தான் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து.

அவரின் மறைவிற்கு பின்னர் நம்பர் 1 டிஆர்பியில் சற்று சருக தொடங்கியது. தற்போது குணசேகரன் கேரக்டரில் வேலராம மூர்த்தி நடித்து வரும் நிலையில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே குணசேகரன் மகள்  காணாமல் போனதை வீட்டில் உள்ள அனைவரும் தேடி வரும் நிலையில் இந்த வாரத்திற்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் கதிர் அண்ணனை மீண்டும் எதிர்த்து நிற்கிறார். அதாவது குணசேகரனை பார்த்து ஒண்ணு நீ திருந்து, இல்லனா என்ன திருந்த விடு என்று கத்துகிறார். இது ஒரு பக்கம் இருக்க, இந்த வீட்டில் மருமகள்களே வேண்டாம் என்று விசாலாட்சி அரிவாளுடன் வருகிறார். இதை வைத்து பார்க்கும்போது இந்த வாரம் எதிர் நீச்சல் சீரியலில் பல சுவாரஸ்யங்கள் இருக்க போகிறது என்று நன்றாக தெரிகிறது. 

வாக்காளர்களே.., தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு.., இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *