பிளஸ் 1 மாணவியை சீரழித்த 18 இளைஞர்கள்.., இன்ஸ்டா காதலால் வந்த விபரீதம்.., எங்கே? என்ன நடந்தது?பிளஸ் 1 மாணவியை சீரழித்த 18 இளைஞர்கள்.., இன்ஸ்டா காதலால் வந்த விபரீதம்.., எங்கே? என்ன நடந்தது?

இன்றைய நவீன உலகத்தில் எல்லாமே அட்வான்ஸாக போய் கொண்டிருக்கும் நிலையில், பாலியல், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் மட்டும் குறைந்தபாடில்லை. அந்த வகையில் பிளஸ் 1 மாணவியை 18 பேர் பாலியல் செய்த கொடுமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சிற்றாறு பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞன் இன்ஸ்டகிராம் முலமாக ஒரு பிளஸ் 1 மாணவியிடம் பேசி வந்துள்ளார்.

நாளடைவில் அது காதலாக மாறிய நிலையில், இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். மேலும் இருவரும் ஆபாச புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட நிலையில், அந்த இளைஞன் போட்டோவை வைத்து மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த போட்டோவை நண்பர்களுக்கும் அனுப்பி, அவர்களும் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனால் பள்ளிக்கூடத்திற்கு போகாமல் இருந்த மாணவியை பெற்றோர்கள் குழந்தைகள் நல அமைப்பினரிடம் அழைத்து சென்ற நிலையில், அவர் எல்லாத்தையும் அவர்களிடம் கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் மாணவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மாணவியுடன் ஒன்றாகப் படித்து வந்த மாணவர்கள் உள்பட 18 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நதியோரம் கிடந்த உடல் பாகம்.., சிக்கிய செல்போன்.., வெற்றி துரைசாமி கதி என்ன?.., வெளியான முக்கிய தகவல்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *