பிரபல இயக்குனர் வீட்டில் கொள்ளை.. உயிராக நினைத்த பொருளை தூக்கிய திருடர்கள்.., என்ன நடந்தது?பிரபல இயக்குனர் வீட்டில் கொள்ளை.. உயிராக நினைத்த பொருளை தூக்கிய திருடர்கள்.., என்ன நடந்தது?

தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த குறைந்த காலத்தில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் தான் இயக்குனர் மணிகண்டன். இவர் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த “காக்கா முட்டை ” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த இவர் தொடர்ந்து குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி உள்ளிட்ட படங்களை இயக்கினார். தேசிய விருது பெற்ற அவர் வீட்டில் நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இயக்குனர் மணிகண்டன் வீடு மற்றும் அலுவலகம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள எழில் நகரில் உள்ளது. இருப்பினும் அவர் தற்போது சென்னையில் வசித்து வரும் நிலையில், மதுரையில் உள்ள அந்த வீட்டில் கடந்த இரு மாதங்களாக அவரிடம் வேலை பார்க்கும் நபர்கள் தான் சென்று வீட்டை பார்த்துக் கொள்கின்றனர். அதுமட்டுமின்றி நரேஷ் குமார் என்பவர் அங்குள்ள நாய்க்கு தினசரி உணவு வைத்து வருகிறார்.

இந்நிலையில் வழக்கம் போல் நேற்று நாய்க்கு சோறு வைக்க சென்ற போது வீட்டின் கதவு திறந்திருப்பதை பார்த்து ஷாக்கான நிலையில் போலீசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் நடத்திய சோதனையில் வீட்டின் பீரோவில் இருந்த கடைசி விவசாயி திரைப்படத்திற்காக மத்திய அரசு வழங்கிய இரு தேசிய விருதுக்கான வெள்ள பதக்கங்கள், 1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் நகை திருடு போனது தெரிய வந்தது. எனவே இது குறித்து போலீஸ் வழக்கு பதிவு செய்து விசரணையை ஆரம்பித்துள்ளனர். 

பயணிகளே.., இந்த ரயில்கள் புறப்படும் நேரத்தில் திடீர் மாற்றம்.., இது தான் காரணமா?.., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *