அடக்கவுளே.., ஒரு மனுஷனுக்கு இப்படி கூடயா சாவு வரும்?.., கால்பந்து வீரரை தாக்கிய மின்னல்.., அதிர்ச்சி புகைப்படம்!!அடக்கவுளே.., ஒரு மனுஷனுக்கு இப்படி கூடயா சாவு வரும்?.., கால்பந்து வீரரை தாக்கிய மின்னல்.., அதிர்ச்சி புகைப்படம்!!

கால்பந்து மைதானத்தில்  விளையாடும் போது வீரரை மின்னல் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கால்பந்து வீரர் உயிரிழப்பு:

சிலிவங்கி மைதானத்தில் பாண்டங், இந்தோனேசியா மற்றும் சுபாங் உள்ளிட்ட அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. எனவே இந்த போட்டியை கண்டுகளிக்க மைதானத்தில் அதிகமானோர் கூடியிருந்தனர். போட்டி சுவாரஸ்யமாக போய் கொண்டிருந்த நிலையில், சுபாங் அணியைச் சேர்ந்த செப்டியன் ரகர்ஜா என்ற வீரரை திடீரென மின்னல் தாக்கியது. அந்த நிமிஷத்தில் நிலை குலைந்து போன அவர் சட்டென்று கீழே விழுந்தார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மற்ற வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். இதையடுத்து அங்கிருந்த வீரர்கள் அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் கடந்த 12 மாதங்களில் கால்பந்து வீரர் மின்னல் தாக்கி இறப்பது இது 2வது முறை என்று அங்குள்ள சோசியல் மீடியா தெரிவிக்கிறது.

கல்யாணமாகி ஒரே வருடத்தில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை.., சன் டிவி சீரியல் நடிகைக்கு நடந்த சோகம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *