அப்பா சாவுக்கு நான் தான் காரணம்?.. உண்மையை உடைத்த SPB மகள் பல்லவி?., கண்ணீர் மல்க பேட்டி!!அப்பா சாவுக்கு நான் தான் காரணம்?.. உண்மையை உடைத்த SPB மகள் பல்லவி?., கண்ணீர் மல்க பேட்டி!!

தமிழ் சினிமாவின் பிரபல பாடகராகவும், நடிகராகவும் விளங்கியவர் தான் மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம். கிட்டத்தட்ட 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய இவர் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். அவரின் இழப்பை இப்பொழுது வரை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. இந்நிலையில் அவர் இறப்புக்கு நான் தான் காரணம் என்று அவருடைய மகள் பல்லவி கண்ணீர் மல்க கூறியுள்ளார். அதில் அவர், ” நான் என்ன சொன்னாலும் என்னுடைய அப்பா கேட்பார், கொரோனா காலகட்டத்தில் அவர் ஹைதராபாத்துக்கு செல்ல வேண்டி இருந்தது. அப்போது சூழ்நிலை சரியில்லை என்பதால் அம்மா போக வேண்டாம் என்று சொன்னார்.

ஆனால் அவரை தடுக்கவில்லை, போகாதீங்க என்று ஒரு வார்த்தை கூட நான் சொல்லவில்லை. அது தான் நான் செய்த பெரிய தவறு. அவர் அங்கே சென்ற போது தான் கொரோனா தொற்று பரவியது. ஒருவேளை நான் போக வேண்டாம் என்று சொல்லிருந்தால் என் அப்பா தற்போது உயிரோடு இருந்திருப்பார், அவரின் இறப்புக்கு நான் தான் காரணம் என்று இப்பொழுது வரை என் மனசில் குற்ற உணர்ச்சி இருந்து வருகிறது. மேலும் அப்பாவை பற்றி பேசினால் அவர் மருத்துவமனையில் இருந்தது தான் நியாபகம் வருகிறது. அவர் யாருக்கும் எந்த தீங்கும் செய்தது இல்லை, பின்னர் ஏன் அவருக்கு இப்படியொரு சாவு என்று பல்லவி கண்ணீர் மல்க பேசியுள்ளார். 

வாகன ஓட்டிகளே.., இனி சாலையில் டோல்கேட் இருக்காது.., ஆனா.. சுங்கக் கட்டணம்?., மத்திய அரசு அதிரடி முடிவு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *