வீல் சேர் கொடுக்க லேட்.., ஏர்போர்ட்டில் மயங்கி விழுந்து உயிரை விட்ட முதியவர்.., நடந்தது என்ன?வீல் சேர் கொடுக்க லேட்.., ஏர்போர்ட்டில் மயங்கி விழுந்து உயிரை விட்ட முதியவர்.., நடந்தது என்ன?

விமான நிலையத்தில் வீல் சேர் தர தாமதமானதால் ஒரு முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதியவர் மரணம்:

அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு புறப்பட்டு வந்த ஏர் இந்தியா விமானம் ஒன்றில், 80 வயதுடைய முதியவர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் பயணம் செய்தார். மேலும் அந்த முதியவர் உடல்நிலை சரியில்லாதவர் என்பதால் அவரை அழைத்து செல்ல குடும்பத்தினர் வீல் சேர் ஒன்றை விமான ஊழியர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால் மற்ற பயணிகள் அதை பயன்படுத்தி வருவதால் வீல் சேர் கொடுப்பதற்கு கொஞ்சம் தாமதம் என்று கூறியுள்ளனர். இதனால் அந்த முதியவர் நடந்து சென்ற சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

இதை தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக  ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமான நிலையத்தில் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால்  முதியவர் ஒருவர்  உயிரிழந்து விட்டார். இது குறித்து அவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம். அதுமட்டுமின்றி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளது.    

என்னடா சொல்றீங்க.., தினசரி 4 பேருக்கு எச்ஐவி தொற்று பாதிப்பா.., மொத்தம் 76 ஆயிரம் பேரா? எய்ட்ஸ் ஆணையம் ஷாக் ரிப்போர்ட்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *