விண்ணில் பறக்க போகும் Naughty Boy "ஜி.எஸ்.எல்.வி" ராக்கெட்.., முழு பணியில் தயராக இருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள்!!விண்ணில் பறக்க போகும் Naughty Boy "ஜி.எஸ்.எல்.வி" ராக்கெட்.., முழு பணியில் தயராக இருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள்!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) பல சாதனைகளை செய்து வருகிறது. தற்போது விண்ணில் இன்சாட் 3டி செயற்கைகோளும், இன்சாட் 3 டிஎஆர் செயற்கைகோளும் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது இயற்கை பேரிடர், வானிலை நிலவரங்களை முன்கூட்டியே கண்டறிய உதவும் “INSAT-3DS” என்ற புதிய செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வடிவமைத்துள்ளது.

எனவே அந்த ராக்கெட்டின் முழு பணி நிறைவடைந்த நிலையில், நேற்று மாலை ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட்டின் கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது. மேலும் இந்த செயற்கை கோளை ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் என்ற ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 5.30 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான முழு பணிகளில்  இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விஞ்ஞானிகள் நாட்டி பாய் என்ற செல்லப் பெயரிட்டு அழைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

திடீரென டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய இந்திய வீரர் அஸ்வின்.., பிசிசிஐ நிர்வாகம் அறிவிப்பு.., வெளியான ஷாக் அப்டேட்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *