பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து.., 10 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு.., சிவகாசியில் பரபரப்பு!!பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து.., 10 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு.., சிவகாசியில் பரபரப்பு!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி உள்ளிட்ட இடங்களில் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகள் இருக்கிறது. குறிப்பாக சிவகாசி மாவட்டம்  அருகே உள்ள வெம்பக் கோட்டையை அடுத்த ராமுதேவன்பட்டி யில் உள்ள தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு 50க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பட்டாசு ஆலையில் இன்று (பிப். 17) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு தீக்கரையானது.

சொல்லப்போனால் அங்கு 4-க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து தரைமட்டமானது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு சிக்கி இருந்த நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றது. இந்த சம்பவத்தில் 6 பெண்கள் 4 ஆண்கள் உட்பட 10 பேர் உடல் கருகி  உயிரிழந்துள்ளனர். இதில் ரமேஷ், கருப்பசாமி, அம்பிகா ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சன் டிவி சீரியல் நடிகை திடீர் மருத்துவமனையில் அனுமதி.., அடக்கடவுளே.., அவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *