இந்திய கிரிக்கெட் அணிக்கு விழுந்த பெரிய அடி.., திடிரென முக்கிய வீரரை தூக்கிய பிசிசிஐ.., என்ன காரணம்?இந்திய கிரிக்கெட் அணிக்கு விழுந்த பெரிய அடி.., திடிரென முக்கிய வீரரை தூக்கிய பிசிசிஐ.., என்ன காரணம்?

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் பும்ரா. தற்போது இவர் இந்திய – இங்கிலாந்துக்கு எதிரான 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்திய அணி இதுவரை நடந்த  3 டெஸ்ட் போட்டிகளில் 2-1 என முன்னிலையில் இருக்கிறது. நான்காவது போட்டி தொடங்க இருக்கும் நிலையில் பிசிசிஐ ஒரு ஷாக்கிங் தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து பும்ராவை வெளியேற்றியுள்ளது.

அவர் தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவதாகவும், இதையடுத்து IPL  தொடர் மற்றும் 2024 டி20 உலக கோப்பை போட்டிகளிலும் அவர் விளையாட இருப்பதால் கண்டிப்பாக அவருக்கு காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் அவரை இந்த போட்டியில் இருந்து நீக்கியதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் அவருக்கு பதிலாக முகமது சிராஜ் மற்றும் முகேஷ் குமார் வேகப் பந்து வீச்சாளர்களாக இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் அஸ்வின் போட்டியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. 

அரசியல் வேட்டையை ஆரம்பித்த தலைவர் விஜய்.., தவெக உறுப்பினர்களுக்கு பறந்த முதல் கோரிக்கை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *