சொத்து குவிப்பு வழக்கு விவகாரம்.., தமிழகத்திற்கு கொண்டுவரப்படும் ஜெ., நகைகள்.., மொத்தம் ஆறு பெட்டி., மதிப்பு எவ்வளவு தெரியுமா?சொத்து குவிப்பு வழக்கு விவகாரம்.., தமிழகத்திற்கு கொண்டுவரப்படும் ஜெ., நகைகள்.., மொத்தம் ஆறு பெட்டி., மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஜெயலலிதா சொத்து குவிப்பு விவகாரம்

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு நான்கு  ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும்  ரூ.100 கோடி அபராதம் விதித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள், நகைகள் அனைத்தையும் கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த பொருட்களை ஏலம் விடலாம் என சமூக ஆர்வலர் ஒருவர் நீதிமன்றத்தில் மனு அளித்த நிலையில், ஒரு சில பொருட்கள் ஏலம் விடப்பட்டது. இதையடுத்து நகைகளையும் ஏலம் விட மனு தாக்கல் செய்த நிலையில், கர்நாடக நீதிமன்றம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதாவது ஜெயலலிதா நகைகளை ஏலம் விடுவதற்கு பதிலாக தமிழக அரசிடம் ஒப்படைக்கலாம் என முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற மார்ச் 6 மற்றும் 7 தேதிகளில் தமிழக உள்துறை செயலாளர் ஆஜராகி ஜெயலலிதாவின் தங்க நகைகளை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளது. அதன்படி கிட்டத்தட்ட ஆறு பெட்டிகள் அனுப்பப்பட இருக்கிறது. அதில்   வைர நகைகள், 11,344 விலை உயர்ந்த பட்டுப் புடவைகள், 28 கிலோ தங்கம், 740 விலை உயர்ந்த செருப்புகள், 800 கிலோ வெள்ளி நகைகள் என மொத்தமாக 6 பெட்டிகள் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது. மேலும் இந்த வழக்கு செலவு கட்டணமாக 5 கோடி ரூபாய் கர்நாடக அரசுக்கு தமிழக அரசு செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *