காதலி வீட்டுக்கு பொண்ணு கேட்டு போன காதலன் .., ஒத்தக்காலில் நின்ற காதலர்கள் .., திடீரென பெட்ரோல் ஊற்றி கொளுத்திய இளைஞர்!!காதலி வீட்டுக்கு பொண்ணு கேட்டு போன காதலன் .., ஒத்தக்காலில் நின்ற காதலர்கள் .., திடீரென பெட்ரோல் ஊற்றி கொளுத்திய இளைஞர்!!

காதலன் சாவு

இன்றைய சமூகத்தில் ஒரு சில காதல் வெற்றியடைந்தாலும், சில காதல்கள் தோல்வியில் தான் முடிகிறது. இதனால் காதலர்கள் உயிரை மாய்த்து கொள்ளும் அளவுக்கு செல்கிறார்கள். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு இளைஞன் தற்கொலை செய்து கொண்ட பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்கடை பகுதியை சேர்ந்த மோகனன் என்பவர்  கேரளாவில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

அதில் மூத்த மகன்  முகேஷ்(25) என்பவர் சென்னையில் பணிபுரிந்து வந்த நிலையில் நித்திரவிளை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து காதலி வீட்டுக்கு முறைப்படி பெண் கேட்டு சென்ற முகேஷுக்கு வெறும் ஏமாற்றமே மிஞ்சியது. அவரை காதலியின் பெற்றோர் ஏற்றுக் கொள்ளாத நிலையில், காதலி வீட்டு முன் போராட்டம் நடத்தினார்.

இதையடுத்து கையில் பெட்ரோலை எடுத்து கொண்டு உடம்பில் ஊற்றி கொண்டு திடீரென தீயை பற்ற வைத்துள்ளார். தீப்பிடித்தவாறு அங்கும் மிங்கும் ஓடிய அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நெருப்பை அனைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதித்து பார்த்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்தனர். இதையடுத்து இது குறித்து  வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *