16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருநங்கைகள்.., ஆயுள் தண்டனை கொடுத்த நீதிமன்றம்!!16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருநங்கைகள்.., ஆயுள் தண்டனை கொடுத்த நீதிமன்றம்!!

இன்றைய சூழ்நிலையில் பாலியல் குற்றங்கள் இல்லாத இடங்கள் இல்லை என்ற எண்ணம் தோன்றும் அளவுக்கு போய் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சேலம் மாவட்டம் நாச்சியூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்ற காயத்ரி(23). இவர் ஆணாக பிறந்து திருநங்கையாக மாறிய அவர் எட்டிகுட்டை மேடு பகுதியை சேர்ந்த சதீஷ் என்கிற முல்லை(24) திருநங்கையுடன் சேர்ந்து 2022ம் ஆண்டு ஒரு தேதியில் ஹோட்டல் ஒன்றுக்கு சாப்பிட சென்றுள்ளனர்.

அப்போது அந்த ஹோட்டலில் வேலை பார்த்த 16 வயது சிறுவனிடம் இந்த திருநங்கைகள்  பிரியாணி வாங்கி தருவதாக கூறி அவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு அழைத்து சென்று அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதை தொடர்ந்து அந்த சிறுவன் இந்த சம்பவம் குறித்து தாயிடம் கூற  அவர்  காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். எனவே இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை அந்த  2 திருநங்கைகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் \காயத்ரி, முல்லை ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பளித்துள்ளார். 

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் திடீர் விபத்து.., தீயணைக்க போராடிய வீரர்கள்!! பயணிகள் அச்சம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *