உனக்கு என் தங்கச்சி கேக்குதா?.. காதலனை வெட்டி கொன்ற காதலி அண்ணன்.., தொடரும் ஆணவப் படுகொலை - 5 பேர் கைது!உனக்கு என் தங்கச்சி கேக்குதா?.. காதலனை வெட்டி கொன்ற காதலி அண்ணன்.., தொடரும் ஆணவப் படுகொலை - 5 பேர் கைது!

தொடரும் ஆணவப் படுகொலை

இன்றைய காலகட்டத்தில் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்து வந்தாலும், ஒரு சிலர் இன்னும் காதலை எதிர்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். சொல்ல போனால் அதை  நினைத்து ஆணவக் கொலையும் செய்து வருகிறார்கள். அந்த வகையில் காதலித்து திருமணம் செய்த ஒரு இளைஞனை காதலியின் சகோதரர் காதலனை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த பிரவீன்(26) என்ற இளைஞர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஷர்மி என்ற பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.

ஆனால் அவர்களின் காதலை காதலியின் வீட்டார்கள் எதிர்த்த நிலையில், ஓடி போய் திருமணம் செய்து கொண்டு தனி வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் குடும்பத்தை அசிங்கப்படுத்தி விட்டாள் என்று காதலியின் சகோதரன் அவர்கள் மீது உக்கிரமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பிரவீன் மனைவிக்கு சிக்கன் ரைஸ் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது காதலியின் அண்ணன் தினேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து உனக்கு என் தங்கச்சி கேக்குதா? என்று கூறி கத்தியால் சரமாரி வெட்டி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். சம்பவ இடத்திலேயே பலியான பிரவீனை காவல்துறை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, குற்றவாளிகளை தேடி வந்தது. இதனை தொடர்ந்து தினேஷ், ஸ்டீபன், ஸ்ரீ, விஷ்ணு, ஜோதி லிங்கம் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். காதல் செய்த  குற்றத்திற்காக இப்படியெல்லாம் ஆணவக்கொலை செய்ய நினைப்பார்களா? என்று பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர்களே.., பிப்ரவரி 27ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை?.., வெளியான முக்கிய தகவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *