Home » செய்திகள் » TNPSC குரூப் தேர்வர்களே.., நாளையோட இந்த விஷயம் முடிகிறது.., உடனே முந்துங்கள்!!

TNPSC குரூப் தேர்வர்களே.., நாளையோட இந்த விஷயம் முடிகிறது.., உடனே முந்துங்கள்!!

TNPSC குரூப் தேர்வர்களே.., நாளையோட இந்த விஷயம் முடிகிறது.., உடனே முந்துங்கள்!!

TNPSC குரூப் தேர்வர்களே

TNPSC தேர்வாணையம் அரசு மற்றும் அரசு சார்ந்த பல்வேறு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் TNPSC குரூப் 4 தேர்வு வருகிற ஜூன் மாதம் 9ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்வாணையம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. அதன்படி  வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட, 16 வகையான அரசு துறைகளில் உள்ள குரூப் – 4 பதவிகளில் 6,244 காலியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. இதனால் தேர்வர்கள் அரசு வேலையை கையில் வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து ஜனவரி 30ல் விண்ணப்பிக்க தொடங்கிய நிலையில், தேர்வர்கள்  போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் நாளையுடன் விண்ணப்பிக்கும் தேதி முடிவடைய இருக்கும் நிலையில், தேர்வர்கள் கால அவகாசம் கேட்டு வருகின்றனர். மேலும், விண்ணப்பங்களை திருத்துவதற்கு மார்ச் 4 முதல் மார்ச் 6 வரை 3 நாட்கள் அவகாசம் உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தேர்வு குறித்த மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற வெப்சைட்டில் சென்று அறிந்து கொள்ளலாம்.

மதுரை மீனாட்சி கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு தடை.., அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top