அடக்கடவுளே.., மாரடைப்பில் புது மாப்பிள்ளை மரணம்.., உயிரை மாய்த்து கொண்ட மனைவி.., பரபரப்பான சம்பவம்!!அடக்கடவுளே.., மாரடைப்பில் புது மாப்பிள்ளை மரணம்.., உயிரை மாய்த்து கொண்ட மனைவி.., பரபரப்பான சம்பவம்!!

கணவன் மனைவி மரணம்

இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. குறிப்பாக 25 வயது முதல் 30 வயது வரை இருக்கும் இளைஞர்களுக்கு தான் மாரடைப்பு அதிகமாக வருவதாக சர்வே சொல்கிறது. அந்த வகையில் திருமணமாகி மூன்று மாதத்தில் கணவன் உயிரிழந்த நிலையில் மனைவி செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அபிஷேக் என்ற இளைஞருக்கும் அஞ்சலி என்ற பெண்ணுக்கு 3 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவை பார்வையிட சென்றுள்ளனர். அப்போது கணவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி உடனே அவரை தனது நண்பர்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினார். இதையடுத்து கண்கலங்கி நின்ற மனைவி தனது கணவரின் உடலை காஜியாபாத்தில் உள்ள அவர்களின் வீட்டிற்கு கொண்டு வந்தார். மேலும் கணவன் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் தொடர்ந்து அழுது கொண்டிருந்த மனைவி திடீரென ஓடி 7வது மாடியில் இருந்து குதித்துள்ளார். அதன் பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் இறந்து விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கணவனுடன் மனைவி உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைமறைவு குற்றவாளியான பிரபல நடிகை.., கைது செய்ய உத்தரவுவிட்ட நீதிமன்றம்.., என்ன காரணம் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *