Home » செய்திகள் » சென்னையில் கொடூரம்.., குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தை.., தூக்கி வீசிய மர்ம நபர்., போலீஸ் விசாரணை!!

சென்னையில் கொடூரம்.., குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தை.., தூக்கி வீசிய மர்ம நபர்., போலீஸ் விசாரணை!!

சென்னையில் கொடூரம்.., குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தை.., தூக்கி வீசிய மர்ம நபர்., போலீஸ் விசாரணை!!

சென்னை மாநகரத்தின் முக்கிய பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் ஒரு உயிருள்ள குழந்தை கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை:

சென்னையில் இருக்கும் பூந்தமல்லி பகுதியில் அமைந்துள்ள தனியார் பெண்கள் விடுதி அருகே உள்ள குப்பை தொட்டியில் கடந்த இரண்டு நாட்களாக பூனை அழுவது போல் கேட்டுள்ளது. இதையடுத்து  நேற்று அந்த சத்தம் அதிகமாக கேட்டதால், அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அவர் வீட்டின் ஜன்னல் பகுதியில் இருந்து பார்த்த போது, குழந்தை தென்பட்டுள்ளது. அந்த குழந்தை பிறந்து கொஞ்ச நாட்களாக தான் இருக்கும். குறிப்பாக தொப்புள் கொடியுடன் எறும்புகள் மொய்த்த நிலையில் அழுது கொண்டிருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பொதுமக்கள் உதவியுடன் அந்த குழந்தையை மீட்டெடுத்த அவர் பூந்தமல்லியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு முதலுதவி செய்த நிலையில்,  சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனவே இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், குழந்தையை 2 நாட்களாக முன்பு வீசி சென்றதும்,  அழுதபடி கிடந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த தமிழக வீரர் அஸ்வின்.., மொத்தம் 500 விக்கெட்.., பிரபலங்கள் வாழ்த்து!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top