அரசியல் கதையில் நடிக்கும் கெளதம் கார்த்திக் - அறிவிப்பை வெளியிட்ட GK 19 படக்குழு !அரசியல் கதையில் நடிக்கும் கெளதம் கார்த்திக் - அறிவிப்பை வெளியிட்ட GK 19 படக்குழு !

தற்போது அரசியல் கதையில் நடிக்கும் கெளதம் கார்த்திக் திரைப்படம் தொடர்பான அறிவிப்பை GK 19 படக்குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கௌதம் கார்த்திக் தற்போது ‘ கிரிமினல் ‘ மற்றும் ‘ மிஸ்டர் எக்ஸ் ‘ என இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில், மேலும் இவர் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் எம். ஜி. ஸ்டூடியோஸ் சார்பில் ஏ.பி.வி. மாறன் மற்றும் டாடா இயக்குநர் கணேஷ் கே பாபு இணைந்து தயாரிக்கும் படத்தில் கௌதம் கார்த்திக் நடிக்க உள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ கடல் ‘ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இதனை தொடர்ந்து இவர் தமிழில் பல வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ பத்து தல ‘ மற்றும் ‘ ஆகஸ்ட் 16, 1947 ‘ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து தற்போது கௌதம் கார்த்திக் ‘ கிரிமினல் ‘ மற்றும் ‘ மிஸ்டர் எக்ஸ் ‘ என இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில், மேலும் இவர் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் கௌதம் கார்த்திக்கின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் இந்த புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.

நடிகர் விதார்த்தின் 7 வயது மகள் செய்த காரியம் – வைரலாகும் வீடியோ இதோ!!

எளிய சாமானிய மக்களின் வாழ்வியல் மற்றும் அரசியலை வெளிப்படுத்தும் வகையில் உருவாக உள்ள இந்த திரைப்படத்திற்கு தற்போதைக்கு GK 19 என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியலை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.

இதனை தொடர்ந்து விரைவில் படப்பிடிப்பை தொடங்கி அடுத்த வருடம் கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *