ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி - என்ன ஆனது? முதல்வர் போட்ட பதிவு!ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி - என்ன ஆனது? முதல்வர் போட்ட பதிவு!

நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி

தமிழ் சினிமாவில் உச்ச பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் தான் நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது இவர் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் ரஜினிகாந்த் திடிரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் இன்று அவருக்கு பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவரின் அடி வயிற்று பகுதியில் வீக்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதை சரி செய்வதற்கு தான் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: CWC 5ல் டைட்டில் வென்ற பிரியங்கா – மணிமேகலை போட்ட அதிரடி பதிவு – என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?

இன்று பரிசோதனை மேற்கொள்ளவே, அவர் ஒரு நாள் முன்பாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். இந்நிலையில் இவர் குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ” மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்” என கூறி பதிவு செய்துள்ளார். மேலும் ரசிகர்களும் கடவுளை பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

உபியில் கோவில்களில் இனிப்பு பிரசாதத்திற்கு தடை

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ் 

தீபாவளி பண்டிகை 2024 – 5975 சிறப்பு ரயில்கள் – மத்திய அமைச்சர் அறிவிப்பு

பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *