சாரி டாடி.., ரெண்டே வருஷத்துல கேள்வி குறியான வாழ்க்கை? ராஜ்கிரண் பேச்சை மீறி கல்யாணம் செய்த மகளுக்கு நேர்ந்த சோகம்!!சாரி டாடி.., ரெண்டே வருஷத்துல கேள்வி குறியான வாழ்க்கை? ராஜ்கிரண் பேச்சை மீறி கல்யாணம் செய்த மகளுக்கு நேர்ந்த சோகம்!!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் ரஜினி, கமல் என பெரிய நடிகர்கள் இருந்த காலகட்டத்தில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகர் ராஜ்கிரண். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் அவர் வளர்த்த பிள்ளை தான் பிரியா. இவர் நடிகர் முனிஷ் ராஜாவை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு ராஜ்கிரண் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் தனது கணவரை விட்டு பிரிந்து விட்டதாக கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ” நான் கடந்த 2022ல் நடிகர் முனீஸ் ராஜா என்பவரை ரகசியமாக கல்யாணம் செய்து கொண்டேன். சமூக வலைத்தளங்கள் வாயிலாக எனக்கு நடந்த திருமணம் குறித்து மக்களுக்கு தெரிந்து இருக்கும். ஆனால் எங்களுக்கு நடந்த கல்யாணம் சட்டபூர்வமானது இல்லை.

இப்பொழுது நாங்கள் ஒன்றாக இல்லை, பிரிந்து விட்டோம். இந்த கல்யாணத்தால் என்னை பெற்ற எடுக்காவிட்டாலும் சொந்த மகள் போல்  வளர்த்த என் அப்பாவை நான் மிகவும் காயப்படுத்தி விட்டேன். அதுவும் நிறைய தடவை நான் கஷ்டப்படுத்தினாலும், என்னைத் எப்போதும் தாங்கிப் பிடித்தார்கள். நான் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் அது பத்தாது” என்று பிரியா கூறியுள்ளார்.

கிடுகிடுவென உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை.., எவ்வளவு தெரியுமா?.., அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *